23 November 2011

சுஜாதாவின் டில்லி பயணம்

ஒவ்வொரு வருஷமும் டில்லி மாறுகிறது.அதிகாலை புகைப்படலம் அதிகமாகி இருக்கிறது.கட்டிடங்கள் உயர்ந்திருக்கின்றன.முன்பெல்லாம் குளிரில் பிளாட்பாரத்தில் சேலத்து சிறுமிகள் தூங்குவார்கள்.இப்போது அவர்கள் தங்கைகளும் உடன் தூங்குகிறார்கள்.
                                                                                  
           நீ பிரபலமாயிருக்கிறாய்.அதனால் உன்னால் இலக்கியம் படைக்க முடியாது.-சுஜாதா அடிக்கடி எதிர்கொள்ளும் சித்தாந்தம்.
        
குளிர் எலும்பைத் தொடுகிறது. ஆரம்பத்தில் குறிப்பிட்ட புகைப்படலம் நகரத்தைக் கவ்வுகிறது.அந்தச் சேலத்துச் சிறுமி சாக்குப் பையைத் தன்மேல் சுற்றிக் கொண்டு தன் தங்கச்சியையும் அணைத்துக் கொண்டு மரத்தடியில் தூங்குவதற்கு ஆயத்தம் செய்கிறாள்.இலக்கியம் என்பதே ஒரு தேவையில்லாத சமாச்சாரமாகப்படுகிறது அப்போது.எல்லாக்கதைகளையும்,கவிதைகளையும் எரித்து அவளைச் சூடு பண்ண வேண்டும் போலிருக்கிறது.


-"கணையாழி"யில் சுஜாதா எழுதிய கட்டுரை சுருக்கமாக இங்கே. 
*-தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.