04 November 2012

மற்றுமோர் புதிய தளம்!

உலகில் உள்ள உயிர்களையெல்லாம் இசையச் செய்வதால்தான் அது இசை. இசை என்பது சிரிப்பையும், அழுகையும் போல உலகை வசப்படுத்தக் கூடிய அனுபவம். உள்ளத்தையும் வசப்படுத்தக்கூடியது. உங்களைப் போல நாங்களும் வசப்பட்டோம். பரவசப்பட்டோம். உங்களுக்கும் அதே உணர்ச்சியை, அனுபவத்தை பகிர்ந்து பன்மடங்காக்கி  தர முயற்சிப்பதுதான், இந்த தளத்தின் அடி நாதம்!

தமிழ்ப் பாடல்வரிகளைத் தமிழிலேயேத் தரவும், விவாதிக்கவும் ஒரு தளம். வந்து பாருங்கள். ஆதரவு தாருங்கள்.
 ஆதரவுகளை எதிர்நோக்கி உள்ளோம்.
மேலும் படிக்க: http://isaipaa.wordpress.com

16 October 2012

தற்காலிக நிறுத்தம்

எனது தளம் சில நிர்வாக மற்றும் தனிப்பட்ட காரணங்களால் வேர்ட்பிரஸ் தளத்தில் இயங்கி வருகிறது. மேலும் படிக்க http://thamizhg.wordpress.com/ -க்கு வருகை தாருங்கள்.
இத்தளம் விரைவில் இயங்கும்.
தவறுகளுக்கும், தடங்கலுக்கும் வருந்துகிறோம்.

07 August 2012

ஈஃபிள் கோபுரம்



  •  முதலாம் உலகப் போரின்போது (1914-1918) பாரிஸ் நகரில் கிளிகள் மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட்டன. ஈபிள் கோபுரத்தில் வைக்கப்பட்ட அந்த கிளிகள், தங்களின் சிறப்பான கேட்புத்திறன் மூலமாக வெகு தூரத்தில் எதிர்நாட்டு விமானங்கள் வரும்போதே சத்தம் எழுப்பி பாரிஸ் நகர மக்களை எச்சரித்தன.



  • 19-ம் நூற்றாண்டில், பிரெஞ்சு எழுத்தாளர்களான  கை டி மாப்பசந்தும், எமிலி ஸோலாவும் சேர்ந்து ஈபிள் கோபுரம் அசிங்கமாக நின்றுகொண்டிருப்பதாகப் பிரச்சாரம் செய்தனர்.மேலும் அது பயனேதுமில்லாமல் பூதாகரமாக நிற்பதாகவும், அது பிரெஞ்சு கலைப் பண்பாட்டைப் பாதிப்பதாகவும், எனவே அதை அகற்ற வேண்டும் என அரசிற்கு மனு அனுப்பினர்.



  • ஈபிள் கோபுரத்தை மிகவும் வெறுத்த கை டி மாப்பசந்த், தினமும் ஈபிள் கோபுரத்தில் உள்ள உணவகத்தில் உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதற்கு அவர் கூறிய காரணம், ‘பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரம் தெரியாத ஒரே இடம் இதுதான்’ என்பதுதான்!