07 August 2012

ஈஃபிள் கோபுரம்



  •  முதலாம் உலகப் போரின்போது (1914-1918) பாரிஸ் நகரில் கிளிகள் மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட்டன. ஈபிள் கோபுரத்தில் வைக்கப்பட்ட அந்த கிளிகள், தங்களின் சிறப்பான கேட்புத்திறன் மூலமாக வெகு தூரத்தில் எதிர்நாட்டு விமானங்கள் வரும்போதே சத்தம் எழுப்பி பாரிஸ் நகர மக்களை எச்சரித்தன.



  • 19-ம் நூற்றாண்டில், பிரெஞ்சு எழுத்தாளர்களான  கை டி மாப்பசந்தும், எமிலி ஸோலாவும் சேர்ந்து ஈபிள் கோபுரம் அசிங்கமாக நின்றுகொண்டிருப்பதாகப் பிரச்சாரம் செய்தனர்.மேலும் அது பயனேதுமில்லாமல் பூதாகரமாக நிற்பதாகவும், அது பிரெஞ்சு கலைப் பண்பாட்டைப் பாதிப்பதாகவும், எனவே அதை அகற்ற வேண்டும் என அரசிற்கு மனு அனுப்பினர்.



  • ஈபிள் கோபுரத்தை மிகவும் வெறுத்த கை டி மாப்பசந்த், தினமும் ஈபிள் கோபுரத்தில் உள்ள உணவகத்தில் உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதற்கு அவர் கூறிய காரணம், ‘பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரம் தெரியாத ஒரே இடம் இதுதான்’ என்பதுதான்!

No comments:

Post a Comment