ஆக.25,2011 அன்று சிலிகான் வேலியில் கால்பதித்து தொழில்நுட்ப செயற்களங்களில் (Technology Arena) புரட்சியை ஏற்படுத்தியவரும், ஆப்பிள் நிறுவனத்தின் முன்னோடியுமான ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமை பொறுப்புகளில் இருந்து விடைபெற்றார்.
ய்க.
கடந்த சில ஆண்டுகளாக கணையப் புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் 56 வயது ஸ்டீவ் ஜாப்ஸ், ஜனவரி முதல் மருத்துவ விடுமுறையில் இருந்து வந்தார். இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து அவர் விலகினார். உடனடியாக, அந்தப் பதவியை டிம் குக் ஏற்றுக்கொண்டார்.
தனது கல்லூரிப் படிப்பை பாதியிலே விட்ட ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை 1970-ல் தொடங்கினார்.
1980 காலகட்டங்களில் இந்நிறுவனம் தயாரித்த மேக் கணினிகள் (Macintosh Computers) பிரபலம் அடைந்தன. 1985-ல் தனது தொழில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட பிரச்னைகளால் நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.
மீண்டும் 1997-ல் ஐமேக் (iMac) என்ற புதிய கண்டுபபிடிப்பு மூலம் அவர் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தை புதுப்பித்தார்.
கடந்த 2002-ல் ஐபாடு (iPod) என்ற வெளியீட்டின் வாயிலாக தொழில்நுட்பத்துறையில் புதுமையான புரட்சியினை ஏற்படுத்தினார். ஐபோன் (iPhone) எனும் புதிய படைப்பைத் தொடர்ந்து, நுண்ணறி பேசி (Smart Phone) சந்தையிலும் ஆப்பிள் நிறுவனம் கால்பதித்தது.
காலப்போக்கில் ஆப்பிள் தன் ஐபோன்களில் பல பதிப்புகளை (Versions) வெளியிட்டு தொழில்நுட்பச் சந்தையில் லாபம் கண்டது மட்டுமின்றி மகத்தான சாதனையும் படைத்தது.
சி.இ.ஓ.க்களுக்கு முன்மாதிரி...
ஆப்பிள் நிறுவனத்தின் அதீத வளர்ச்சிக்குகாரணகர்த்தாவாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினாலும், அந்த இடத்துக்கு ஆப்பிள் நிறுவனத்தின் மற்றொரு முன்னோடியான டிம் குக் வருவதால் அதிக பாதிப்பு இருக்காது என்பது பரலவான கணிப்பு.
மேலும் படங்கள்,தகவல்களுக்கு.கிளிக் செநன்றி:
yahoo.in
vikatan.com
No comments:
Post a Comment