வணக்கம். இணைய வழி வாசிப்பு கொண்ட உங்களுக்கு. வெறுமனே புத்தக வழி வாசிப்பு மட்டுமே கொண்டிருந்த என்னை புதிய மாற்றுச் சிந்தனைக்கு மாற்றிய பல நல்ல உள்ளத்தார்க்கு நான் செய்யும்/செலுத்தும் முதல் நன்றி.இந்த உலகில் இதுகாறும் நீங்கள் எல்லாம் கண்ட நிகழ்வுகள் என்னையும் யோசிக்க வைத்துள்ளன .
எனக்கான சிந்தனைகளாகவே இனி வரப்போகும் பதிவுகளை நான் எண்ணுகிறேன் .
எனக்கான சிந்தனைகளாகவே இனி வரப்போகும் பதிவுகளை நான் எண்ணுகிறேன் .
தமிழ் என் பெயர் மட்டுமல்ல இனம்,மொழி என உணரவைத்த தந்தை முதல் என் சிந்தனைகளோடு ஒத்துப்போன அன்பர்கள் நவபாரத்,அர்ஜுன் பரமசிவம் ,சிதம்பரம் ஆகியோரையும் என் விசைப்பலகை மறக்காது.
"நீ கற்றவற்றை இச்சமூகத்திற்கு கற்றுத் தராவிடில் அதனால் பயனில்லை "என்ற என் அப்பாவின் கட்டளைக்கு இணங்கவே LEARN AND TEACH என பெயரிட்டுள்ளேன் . உங்கள் ஆதரவும் பங்களிப்பும் எதிர்பார்த்து ,
அன்பன்
அன்பன்
தமிழ் .
No comments:
Post a Comment