16 July 2011

பலமே வாழ்வு -2

ழுதி முடித்த பின்தான் யோசித்தேன்.இந்நாட்டுப் பாதுகாப்பிற்கு சாதாரணமானவர்கள் என்ன செய்து விட முடியும்?பெருமூச்சு மட்டுமா ,ஆம் என தோராயமாக ஒப்புக்கொண்டாலும் நம்மாலும் ஒன்றேஒன்றுமட்டும் முடியும் என நினைக்கிறேன்.


ஒரு வழி
ஒன்று வழி.

ஒன்று படுவதும் வழி .
எத்தனை இடர்ப்பாடு வரினும் இந்தியராகிய நாம் உடனே உதவிக்கரம் நீட்டுகிறோம்.ஆம்.ஜப்பான் மக்கள் அணுகுண்டால் பாதிக்கப்பட்டே மீண்டவர்கள்.நம்முடைய இழப்புகள் அவர்களோடு ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை அது ஆழிப்பேரலையாக இருந்தாலும்,அணுகுண்டுவெடிப்பாக இருந்தாலும்.உலகத்தார் எத்தனை உச் கொட்டினாலும் அவர்கள் தங்கள் வளர்ச்சியின்மூலம் பிரமிப்பூட்டுகிறார்கள்."அட இந்திய மக்களும் முன்னேற்றபாதைக்கு செல்கின்றனரோ, அவர்களின் தன்னம்பிக்கையைப் பாருங்களேன்"என மற்றவர்கள் எண்ணும்படி நம் வாழ்க்கைப்பாதை மாறுமா?.காலம் பதிலுரைக்கும்.மாலன் 'என் ஜன்னலுக்கு வெளியே' என்ற புத்தகத்தில் இதே போன்ற கருத்தையே கூறியிருக்கிறார்(26 -11 சம்பவம் பற்றி ) .சரி இதற்கும் பாதுகாப்பிற்கும் என்ன சம்பந்தம் எனும் கேள்வி வரலாம்.
" இந்திய திருநாட்டின் பாதுகாப்பு குறைபாடுகள்" என்ற தலைப்பின் கீழும் பத்தி பத்தியாக எழுதலாம்.ஆனால் செயல் இல்லாத சொல் விழலுக்கு இறைத்த நீர் போலாகும்.செயல்படுத்தி இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது இந்திய பாதுகாப்பு,உள்துறை அமைச்சகப் பணியாகும்.
என்ன உங்கள் இருப்பிடம் பாதுகாப்பாகத்தானே உள்ளது.

இன்னும் அதிகமாய் எழுதலாம்.ஆனால் "வாய்ச்சொல் வாள் வீச மாட்டார்கள்   "எனும்படி யாராவது அறிக்கை வெளியிட்டுவிட்டால்.
                           
                                                                                                                       அன்பன்
                                                                                                                         தமிழ்    
                                                  

No comments:

Post a Comment