04 January 2012

சிரிக்க ஒரு பதிவு...


நகைச்சுவைப் பதிவுகள் பொதுவாக இடுவதில் விருப்பமில்லை.வித்தியாச-ரசனை கருதி சிரிப்பிற்கு சிறிது இடம் ஒதுக்குகிறேன். தொடர்ச்சியாக இந்த வரிசையில் சில பதிவுகள் வரலாம்.கூகிள் பிளஸ் அன்பர் M.S. Ramajanarthanan  அவர்களுக்கு நன்றிகள்.
                                                               ****************
நீ யாரோ ரெண்டு பேரோட ஊர் சுத்திட்டு

இருக்கியாமே ?'

'யாரோ உங்ககிட்டே ஒண்ணுக்கு ரெண்டா சொல்லியிருக்காங்க
                                                             *****************
அப்பா: உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது?

மகன்: நிலா மாதிரி!

அப்பா: நிலா மாதிரின்னா?

மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!!
                                                          *********************

கணவன் : தெருவுல ஒரு கருப்பு நாய்
செத்து கிடக்கே.. நீ எதாவது அதுக்கு
சாப்பாடு போட்டியா..?

மனைவி : நான் உங்களுக்கு மட்டும் தாங்க
சாப்பாடு போட்டேன்.. வேற எந்த நாய்க்கும்
சாப்பாடு போடலை..

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
அந்த காலத்துல குதிரையில வந்து
கொள்ளை அடிப்பாங்களே.. அந்த
கொள்ளைக்காரங்க எல்லாம் இப்பவும்
இருக்காங்களா..?

இருக்காங்க.. ஆனா அங்கே அங்கே
ஸ்கூல்., காலேஜ்னு கட்டி செட்டில்
ஆயிட்டாங்க..

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
நான் சந்திரமண்டலத்தில 4 ஏக்கர்
நிலம் வாங்கலாம்னு இருக்கேன்..

சந்திரமண்டலத்திலயா..? அங்கே
கரெண்ட்., ரோடு வசதி எல்லாம்
கிடையாதே..?!!

டேய் லூசு.. இங்கே மட்டும்
அதெல்லாம் எங்கடா இருக்கு..?

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
" மன்னா..!! எதிரி நம் மகாராணியை
கடத்த திட்டமிட்டு உள்ளான்.. "

" அவனுக்கு வேண்டிய சகல
உதவிகளையும் உடனே
செய்யுங்கள் அமைச்சரே..!! "

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
( டீச்சர் மாணவனிடம்.. )

யார் என்ன சொன்னாலும்
அப்படியே நம்பிடக்கூடாது
ஏன்.?, எதுக்கு..?, எப்படி..?-னு
கேக்கணும்..

" ஏன் கேக்கணும் டீச்சர்..?
எதுக்கு கேக்கணும் டீச்சர்..?
எப்படி கேக்கணும் டீச்சர்..? "
****************************
                                                                  -இன்னும் சிரிக்கலாம் அடுத்த பதிவில்.

No comments:

Post a Comment