12 September 2011

தமிழ்ப் பழமொழிகள்-ஆ பகுதி-02

தமிழ்ப் பழமொழிகள் குறித்த தேடலில் இருந்தேன்.அதுசமயம் பரவலாக பல்வேறு பழமொழிகள் காணக்கிடைத்தன.நிரம்பக் கிடைத்துள்ளது.எனவே இப்பதிவில் 'ஆ'-வில் மட்டும்.பொறுமையாகப் படியுங்கள்.ஏதேனும் ஒரு கணம் உங்களுக்கு உதவலாம்.பிழைகளோ,சேர்ப்புகளோ ,கருத்துகளோ இருப்பின் பதிவு செய்யுங்கள்.

 இதற்கு முன்   அ 




  1. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
  2. ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
  3. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
  4. ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
  5. ஆசை வெட்கம் அறியாது.
  6. ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.
  7. ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
  8. ஆடிப் பட்டம் தேடி விதை.
  9. ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
  10. ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
  11. ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமா.
  12. ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
  13. ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
  14. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
  15. ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
  16. ஆயிரங்காலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
  17. ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
  18. ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே
  19. ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்துச் சீனி வாங்க முடியலையாம்!
  20. ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
  21. ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
  22. ஆரால் கேடு, வாயால் கேடு.
  23. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  24. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
  25. ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
  26. ஆழமறியாமல் காலை இடாதே.
  27. ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
  28. ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
  29. ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
  30. ஆழம் தெரியாமல் காலை விடாதே.
  31. ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
  32. ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
  33. ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
  34. ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  35. ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
  36. ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
  37. ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
  38. ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
  39. ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
  40. ஆனைக்கும் அடிசறுக்கும்.
  41. ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
  42. ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.



No comments:

Post a Comment