15 September 2011

தமிழ்ப் பழமொழிகள் உ - பகுதி-04

இப்பதிவில் 'உ' -ல் மட்டும்.பொறுமையாகப் படியுங்கள்.ஏதேனும் ஒரு கணம் உங்களுக்கு உதவலாம்.பிழைகளோ,சேர்ப்புகளோ ,கருத்துகளோ இருப்பின் பதிவு செய்யுங்கள்.

இதற்கு முன்    இ,ஈ 

  1. உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
  2. உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
  3. உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
  4. உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
  5. உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
  6. உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.
  7. உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
  8. உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
  9. உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
  10. உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
  11. உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
  12. உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை
  13. உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
  14. உப்​பைத் தின்​ற​வன் தண்​ணீர் குடிப்பான்
  15. உரம் ஏற்றி உழவு செய்
  16. உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
  17. உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
  18. உலோபிக்கு இரட்டை செலவு.
  19. உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
  20. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
  21. உளவு இல்லாமல் களவு இல்லை.
  22. உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
  23. உள்ளது போகாது இல்லது வாராது.
  24. உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
  25. உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
  26. உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.
  27.  [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]



No comments:

Post a Comment