14 September 2011

தமிழ்ப் பழமொழிகள் இ, ஈ- பகுதி-03

தமிழ்ப் பழமொழிகள் குறித்த தேடலில் இருந்தேன்.அதுசமயம் பரவலாக பல்வேறு பழமொழிகள் காணக்கிடைத்தன.நிரம்பக் கிடைத்துள்ளது.எனவே இப்பதிவில் 'இ','ஈ' -ல் மட்டும்.பொறுமையாகப் படியுங்கள்.ஏதேனும் ஒரு கணம் உங்களுக்கு உதவலாம்.பிழைகளோ,சேர்ப்புகளோ ,கருத்துகளோ இருப்பின் பதிவு செய்யுங்கள்.

இதற்கு முன்   


இ, ஈ

  1. இக்கரைக்கு அக்கரை பச்சை.
  2. இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
  3. இஞ்சி இலாபம் மஞ்சளில்.
  4. இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
  5. இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
  6. இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
  7. இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
  8. இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
  9. இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
  10. இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.
  11. இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
  12. இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
  13. இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
  14. இராச திசையில் கெட்டவணுமில்லை
  15. இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
  16. இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
  17. இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
  18. இருவர் நட்பு ஒருவர் பொறை.
  19. இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
  20. இல்லது வாராது; உள்ளது போகாது.
  21. இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
  22. இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
  23. இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
  24. இளங்கன்று பயமறியாது
  25. இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
  26. இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
  27. இளைய பிள்ளைக்காரிக்குத் தலைப் பிள்ளைக்காரி வைத்தியம் சொன்னது போல.
  28. இறங்கு பொழுதில் மருந்து குடி.
  29. இறுகினால் களி , இளகினால் கூழ்.
  30. இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
  31. இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
  32. இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
  33. இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?
  34. ஈக்கு விடம்* தலையில், தேளுக்கு விடம்* கொடுக்கில்.
  35. ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
  36. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
  37. ஈர நாவிற்கு எலும்பில்லை.
  38. ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.

*-விடம் =விஷம் .

No comments:

Post a Comment